நீள்கிற கணங்களில் விழுந்து மறைந்துகொண்டிருக்கிறாள்
நான் நீர்வற்றிய நீர்நிலையில்
வெடிப்புகளில் தோன்றிக்கொண்டிருக்கிறேன்
அவளற்ற இந்நாளின் என் நொடிகளில்
சர்ப்பங்கள் தீண்டுகின்றன
கொடிய நஞ்சின் வன்மம் கண்ணிமைகளை
ஓங்கி சார்த்த சயனத்தில் சாய்கிறேன்
மூடிய இமைமூடிகள் மூடியும் மூடாது
அவளின் சித்திரத்தை வரைய முனைகின்றன
வண்ணக்குழைவுகளுள் இதழ்கள் செந்நிறத்தில்
வசீகரிக்க குப்புற கவிழ்ந்து முத்தமிடுகிறேன்
சிமெண்ட் தரையதின் குளிர்வினில்
கற்பனித்த ஓவியத்தை தவறவிடுகிறேன்
அதிகாலை புலர்ந்து அவள் புலர
புலராத அவள் கதவனில் விழிதிறந்திருக்கிறேன்
அவள்திசை திறந்துவிடும் ஆழ்ந்த கணிப்பினில்
அகத்தினில் அவள் காதல் மீட்டெடுக்கிறேன்
இருக்கின்ற உலகின் நிலை குலைந்து
நிச்சலனமில்லாது கொடிய வெயிலினூடே
காய்ந்துதிரும் இலையினில் கிடக்கிறேன்
ஒரு சொல் ஒலிக்க கேட்காமல்
துவழ்கின்ற செவிகளில் நேற்றைய
அவளின் உரையாடல் திரும்பவும் ஒலிக்கிறது
மணித்துளிகள் காற்றோடு காற்றாக
ஒடிந்து சாயும் மனதுடன் இமைமுழுதும்
கடலோட உப்புக்கற்களாகின்றேன்
நோவுகள்கூடி சிரம் சோர்வினில் உழல
இந்நாளின் மீது நடக்காத அவள் சொற்களை
இ்ழந்தகொண்டு பேதலிப்பில் கனக்கின்றேன்
முளைக்கும் மறுபொழுதில் துளிர்க்கும்
அவள் நுனியிலையில்
ஒளிவேத்தில்அரும்பும் கனாவினில் நடக்கின்றேன்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக