ஞாயிறு, 18 டிசம்பர், 2011
ஓர் அலை பேசி உரையாடல்-----
ஆண்-
தேசமெங்கும் தீயெரிந்த காலமதனில்
கண்மணியே உனைவிட்டு நானும் பிரிந்தேன்
பாசம்வைத்த உறவுகளின்
உறவுகளின் உயர்வு எண்ணியே
நேசம் வைத்த நின்நிழலை
பிரிய துணிந்தேன்-
நெஞசில் வைத்த ஆசைகளை
கொஞசமொதுக்கி
தஞ்சமென்று என்னை நம்பும்
தங்கையர்காய் வாழ துணிந்தேன்
பெண்-
உனைபிரிந்த நாள் முதலாய்
என்னை வெறுத்தேன்
கண்ணில் நீர் தேக்கி தினம்
காவலிருந்தேன்
ஒரு நாள் வருவீர்
கைசேர்ந்து காதலுறுவேன்
என்று ஒரு கனவினிலே
உயிரை வளர்த்தேன்
ஆண்-
கொட்டும் பனி குளிருறையும்
தேசமதனில்
உன் நினைவு சூட்டினிலே
உயிரை பிடித்தேன்.
என் கடமை தான் முடித்து
வேலை நிறுத்தி
என் இணையே உனை காண
ஓடி வருவேன்
நிலவிறங்கி வருகின்ற ஓர்
மாலைப் பொழுதில்
என்னவளே உன் அருகில் நானுமிருப்பேன்-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக